சென்னையில் இதுவரை இல்லாத அதிகரிப்பு.. ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா.. ஷாக் லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்சமான நோயாளிகள் எண்ணிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
Recommended Video
இதன் மூலமாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை 673 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு 12, கள்ளக்குறிச்சி 3, காஞ்சிபுரம் 1, நாமக்கல் 2 என்று நோயாளிகள் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் புதிய நோயாளிகள் யாரும் இன்று கண்டறியப் படவில்லை.

ஒரு லட்சம் பரிசோதனை
இதுவரை தமிழகத்தில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இது ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பரிசோதனை அளவு மிகக் குறைவு என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி ஆகவேண்டும்.
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 1874 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று மட்டும் 7 ஆயிரத்து 93 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதி 55 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஏப்ரல் 22ம் தேதி 15 பேருக்கு பாதிப்பு இருந்தது. ஏப்ரல் 23ம் தேதி 27 பேர், ஏப்ரல் 24ஆம் தேதி 52 பேர், 25ஆம் தேதி 43 பேர், 26ஆம் தேதி 28 பேர், 27 ஆம் தேதி 47 பேர் பாதிக்கப்பட்டதாக பதிவாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக நிலவரம்
இன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்திலும் சரி, சென்னையிலும் சரி, இன்றுதான் ஒரே நாளுக்கான, எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆதங்கம்
ஊரடங்கு உத்தரவை உரிய வகையில் தமிழக மக்கள் பின்பற்றவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய மீட்டிங்கில் ஆதங்கம் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் நிலவிய மக்கள் கூட்டத்தை உதாரணமாக கூறியிருந்தார். இந்த கருத்து வெளியான இன்றைய தினம், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications