தமிழகத்தில் மேலும் 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இன்றைய பலி எண்ணிக்கை 25
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2341 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25. இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 2352 ஆகும்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,41,488 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட கொரோனாவைரஸ் சோதனை சாம்பிள்கள் 80,112. கடந்த 24 மணி நேரத்தில் 79,328 பேருக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 2352 பேரையும் சேர்த்தால் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 11 ஆயிரத்து 198 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications