தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்போம்.. ஜனதா ஊரடங்கை கொண்டாடிய குட்டீஸ்கள்.. செம வீடியோ!
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து தமிழ்நாட்டு குட்டீஸ்கள் தெரிவித்த கருத்தை பாருங்கள்!
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து தமிழ்நாட்டு குட்டீஸ்கள் தெரிவித்த கருத்தை பாருங்கள்!
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக இன்று நாடு முழுக்க மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்திலும் மக்கள் சார்பாக ஜனதா ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்களில் இந்த ஊரடங்கு பின்பற்றப்பட்டது.

மக்கள் தாமாக முன் வந்து இந்த ஊரடங்கை கடைபிடித்தனர். பல்வேறு கிராமங்களில் கூட மக்கள் இப்படி ஊரடங்கை கடைபிடித்தனர். இதனால் வீட்டில் இருக்கும் இருக்கும் பெரியவர்கள் எல்லோரும் டிவி முன் மொத்தமாக முடங்கினார்கள்.
இளைஞர்கள் எல்லோரும் செல்போன், லேப்டாப் முன்னில் முடங்கி முழு நாளை போக்கினார்கள். இன்னொரு பக்கம் குட்டீஸ்கள் மட்டும் இந்த ஊரடங்கை கொண்டாடி உள்ளனர்.

வீட்டில் இருக்கும் குட்டிஸ்கள் எல்லாம் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே கிரிக்கெட் விளையாடும் சூழ்நிலை உருவானது. அதேபோல் குட்டீஸ்கள் சிலர் தங்கள் பெற்றோருக்கு சமையலின் போது உதவுவதும் நடந்தது. கொரோனா குறித்து சென்னை ஹஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த குடீஸ்களிடம் கேட்டதற்கு கொரோனா வைரஸால் மக்களை வீட்டிற்கு உள்ளே இருக்க சொல்லி உள்ளனர்.
அதனால்தான் இன்று தடை. நாங்கள் மாஸ்க் போட மாட்டோம். எங்களிடம் காசு இல்லை. 12 மணி நேரம்தான் கொரோனா உயிரோடு இருக்கும். காய்ச்சல்தான் இதன் அறிகுறி. கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனவை நாட்டிற்குள் அனுமதி மாட்டோம். கொரோனவை ஒழிப்போம். கொரோனாவிற்கு எதிராக போராடுவோம் என்று இந்த சிறுவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications