கொரோனா பாதிப்பு.. கேரளா செல்வதை தவிருங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சீனாவின் வுகானில் உருவாகிய கொரோனா வைரஸ் இன்று உலகின் 100 நாடுகளுக்கு பரவி உள்ளது. சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 71 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் இத்தாலி சென்று வந்ததை மறைத்ததால் பலருக்கும் கொரோனா பரவ காரணமாகிவிட்டார்கள். அந்த தம்பதி உள்பட 10க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதேநேரம் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இதுவரை இல்லை. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் மட்டுமல்ல, பறவைக்காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் மக்கள் காய்ச்சல் வந்தாலே அங்கு அச்சத்தில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications