தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதி - 869 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,26,943 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,26,943 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,07,744 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 6971பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 869 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிகவும் குறைந்துள்ளது. 20 மாவட்டங்களிலும் 10க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த 6 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 3 பேரும், கோவை மாவட்டத்தில் ஒருவரும், விருதுநகர் மாவட்டத்தில் ஒருவரும் தஞ்சாவூர் மாவட் டத்தில் 1 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 247 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 2156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து 2,300 பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் 2,146 பேர் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. மற்றவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு!












Click it and Unblock the Notifications