தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Recommended Video

இந்தியா முழுவதும் 3003 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மெகா திட்டம் நேற்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

அது போல் தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்றைய தினம் தொடங்கின. வாரத்தில் 4 நாட்கள் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
சுமார் 3 கோடி பேருக்கு போட்டு முடித்த பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் கொண்ட 50 வயதுக்குள்பட்டவர்கள் என 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications