ஆரம்பிச்சாச்சு.. தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு... இன்று சென்னையில் தொடக்கம்...!
எம்பிபிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டார்.
சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு சென்னையில் தொடங்கி உள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.

கடந்த 3-ந்தேதி ஆன்லைன் மூலம் இதனை விண்ணப்பிக்க, இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.. பிறகு, மேலும் 3 நாட்கள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.. இதற்கான முழுமையான பணி நிறைவடைந்ததும் சீட் மெட்ரிக்ஸ் பணி தொடங்கும்..
இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசைபடி லிஸ்ட்டும் தயாரிக்கப்படும்... 2 நாட்களுக்கு முன்பு எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் அதாவது இன்றைய தினம் தொடங்க உள்ளதாக கூறினார்..
அந்தவகையில், தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவமனையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
2022 - 23ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கு மொத்தமுள்ள 8ஆயிரத்து 225 இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக, கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இன்று முதல் கவுன்சிலிங் நடக்கிறது.. இன்று முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 20ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications