சிபிஐ விசாரணை.. நேரா உயர்நீதிமன்றத்துக்கு போன உமா ஆனந்தன்! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
சென்னை: "தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கரூர் சம்பவத்திற்கு பின்னால் சதி திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. எனவே வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்பி உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுக வேண்டும் என்று கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
"காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தங்கள் கடமையை வேண்டும் என்றே செய்ய தவறியதன் மூலம் 41 அப்பாவி மக்கள் பலியானார்களா? நேரம், இடம் இரண்டும் அரசியல் பேரணி நடத்த சாதகமாக இல்லை என்பது நன்கு தெரிந்தும் அரசியல் உள்நோக்கத்துடன் இதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என பல்வேறு கேள்விகள் எழுவதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று உமா ஆனந்த்ன் வலியுறுத்தியிருந்தார்.

சிபிஐ விசாரணை கோரிய 7 மனுக்களை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்து வருகிறது. எனவே, மனுவை அங்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தி உமா ஆனந்தனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications