காடுவெட்டி குரு வாழ்க்கையை மையமாக வைத்து படம்.. குறுக்கே வந்த குடும்பம்! இயக்குநருக்கு கோர்ட் ஆர்டர்
சென்னை: வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், இயக்குநர் கெளதமன் பதில் அளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.குருவின் வாழ்க்கை வரலாற்றை அனுமதியின்றி படமாக எடுத்துள்ளனர் என குருவின் மனைவி கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். படையாண்ட வீரா திரைப்படத்துக்கு தடை விதிக்க மனுவில் இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைந்த பாமக முன்னணி தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மனைவி கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்னியர் சங்க தலைவராகவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தங்கள் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு மிக நெருக்கமான இயக்குனர் கெளதமன், படையாண்ட மாவீரா என்ற பெயரில் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படத்தை தங்கள் அனுமதி பெறாமல் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டு வரும் மே 23 ஆம் தேதி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும், ஜெ.குருவின் குடும்பத்தினர் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டுள்ள படையாண்ட மாவீரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.குரு மரணமடைந்த போது அவரது உடலை குடும்பத்தினர் பார்க்கவிடாமல் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தடுத்ததாகவும், ஜெ.குருவின் மரணத்தில் தங்கள் குடும்பத்திற்கு சந்தேகம் இருக்கும் நிலையில், ராமதாஸின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இயக்குனர் கெளதமன், படையாண்ட மாவீரா என்ற திரைப்படத்தை அனுமதி பெறாமல் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இயக்குனர் கெளதமன், திரைப்படத்தில், மறைந்த ஜெ.குருவை தவறாகச் சித்தரிக்க வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுதா, இந்த மனுவுக்கு இயக்குனர் கெளதமன் மே 15 ஆம் தேதி நாளைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications