இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12265 பேருக்கு கொரோனா.. கேரளாவில் தொடர்ந்து அதிகரிப்பு
சென்னை: இந்தியாவில் இதுவரை 34,332,407 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12265 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பண்டிகை நாட்களை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மக்கள் அதிக அளவில் வெளியே சென்றதால் வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 461 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 459,875 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
இதுவரை மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்தியாவில் இதுவரை 33,715,722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 156,810 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மீண்டும் 1000க்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. இது பரவல் அங்கு அதிகரித்துவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. . மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,14,158 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 18,745 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,313 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,55,100 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 39 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7312 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 49,87,710 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 73,698 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 32,598 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,81,414 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 1000க்கும் கீழ் சென்றுள்ளது. தீபாவளி காரணமாக இதுவரை கேஸ்கள் உயரவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 27,05,548 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 962 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,176 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,58,360 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 11,012 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,89,014 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,091 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,42,588 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,335 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications