சென்னையில் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயம்.. மீறினால் நடவடிக்கை
சென்னை: சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகிறது, வீட்டைவிட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 98 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக 205 ஆக உள்ளது

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, சென்னையில் முககவசம் அணிவது உடனடியாக கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாமல் வெளியே சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டிக்கொண்டு வெளியே வந்தால் அந்த வாகனத்திற்கான அனுமதி சீட்டு (பாஸ்) ரத்து செய்யப்படும் என்றும், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னை மாநாகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications