சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிவேகமாக சரியும் கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் குறைவு.. 2 மாவட்டங்களில் பாதிப்பு சதம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் மரண வழக்கு.. சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்! ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் மரண வழக்கு.. சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

வேகமாக குறையும் கொரோனா

வேகமாக குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 1,500-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். இதனால் மொத்த பாதிப்பு 26,99,554 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 3 பேர் இறந்தனர், நாகப்பட்டினத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,072 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,286 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,51,431 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை தொடர்ந்து டாப்

சென்னை தொடர்ந்து டாப்

12,051 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,22,835 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,98,66,254 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 135 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 150-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

2 மாவட்டங்களில் சதம்

2 மாவட்டங்களில் சதம்

கோவையில் 123 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருகிறது., செங்கல்பட்டில் 86 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 28 பேருக்கும், மதுரையில் 16 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 18 பேருக்கும், திருவள்ளூரில் 25 பேருக்கும், திருச்சியில் 42 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 65 பேருக்கும், விருதுநகரில் 4 பேருக்கும், ஈரோட்டில் 77 பேருக்கும், சேலத்தில் 62 பேருக்கும், நாமக்கல்லில் 47 பேருக்கும், தஞ்சாவூரில் 44 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.

English summary
Corona infection has been confirmed in 1,061 people in Tamil Nadu today. Another 12 people were killed in the corona. Corona infection continues to decline in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X