அரசியல்வாதிகளை விடாமல் துரத்தும் கொரோனா..பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு தொற்று உறுதி!
சென்னை: பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது.கொரோனா தினசரி பாதிப்பு 6,000-ஐ கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று எற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications