தமிழகத்தில்18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் - ராதாகிருஷ்ணன்
ஜனவரி 8ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய அடுத்த நாளே மக்களுக்கு தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனவரி 8 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்கும் வசதி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னை பெரியமேட்டில் மத்திய அரசின் மருந்து கிடங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய அடுத்த நாளே மக்களுக்கு தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. ஜனவரி 8 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்கும் வசதி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது. 30 லட்சம் ஊசிகள் நாளை முதல் மாவட்டம் வாரியாக பகிர்ந்து அளிக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். பிறகு முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசித்து தெரிவிப்பார்கள். அதன்பின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் " என்றார்.