மத்திய அரசுக்கு எதிரான கோபத்தை திசைதிருப்பவே கொங்கு நாடு மாநில கோரிக்கை... சி.பி.எம். கடும் கண்டனம்
சென்னை: மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிரான கோபத்தை திசை திருப்பவே கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை எழுப்புகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ் நாட்டைச் சார்ந்த எல்.முருகன், மத்திய அரசின் இணை அமைச்சராக பொறுப்பேற்ற போது, அவர் 'கொங்கு நாட்டை' சேர்ந்தவர் என்று அரசுக் குறிப்பில் இடம்பெற்றிருந்தது. அடுத்த சில நாட்களில், தமிழகத்தை துண்டாடி கொங்கு நாடு 'யூனியன் பிரதேசம்' உருவாக்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது.

கொங்கு நாடு மாநில கோரிக்கை
தமிழகத்தில் உள்ள பாஜகவினர் பலரும் மேற்கு மாவட்டங்களை தனியாக்கி 'கொங்கு நாடாக' அறிவிக்க வேண்டும் என பேசிவருகின்றனர். இது தொடர்பாக கோவை மாவட்ட பாஜக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் தெரிகிறது. கொரோனா பெருந்தொற்று பரவலை எதிர்த்து நாடே கடுமையாக போராடி வருகிறது. ஆனால், தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கோளாறு. மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்யவில்லை என்பதுடன் ஜி.எஸ்.டி வரியில் உரிய பங்கினை தருவதிலும், ஜி.எஸ்.டி ஈட்டுத்தொகை வழங்குவதிலும் இழுத்தடிப்பை செய்துவருகிறது.

ஸ்டேன்சாமி மரணம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விலை உயர்வு ஆகிவற்றின் காரணமாக மக்கள் மருத்துவத்திற்கு செய்யும் செலவு குறைத்து கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. அடக்குமுறைச் சட்டங்களை பயப்படுத்தி கைதுசெய்யப்பட்ட ஸ்டேன் சாமி, காவலில் மரணமடைந்தார். இது 'நிறுவனப் படுகொலை' என்று ஊடகங்கள் வெளிப்படையாகவே விமர்சித்து எழுதின.

கோபத்தை திசை திருப்புதல்
இப்படியான மத்திய அரசின் எதேசாதிகார, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கோபக் கனலை திசை திருப்பும் நோக்கத்திற்காக, தமிழ்நாட்டை துண்டாடும் பிரச்சாரத்தை சங்க பரிவாரம் கையில் எடுத்துள்ளது. மேலும், மொழி வழியாக மாநிலங்கள் அமைவது, மக்களின் உரிமைக் குரல்களை வலிமைப்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் அதனை விரும்புவதில்லை. சிறு,சிறு ஆட்சிப்பகுதிகளாக அவைகளை உடைத்து பலவீனமாக்கி அதன் வழியாக பல மொழி பேசும் சிறு பிரதேசங்கள், வலுவான ஒற்றை ஆட்சி என்பதுதான் பாஜகவை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்த கோட்பாடு ஆகும்.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்
இந்த நோக்கத்தில்தான், இந்தியாவின் பல மாநிலங்களை அவர்கள் துண்டாடியுள்ளனர். இதனால் அரசியல் பலனையும் அடைந்துள்ளார்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் இயல்பான தேர்வாக அமைந்தது மொழிவாரி மாநிலங்கள். விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத, சங்க பரிவாரத்திற்கு இதுகுறித்த அக்கறையோ, மக்கள் நலன் குறித்த பொறுப்புணர்வோ கொஞ்சமும் இல்லை. அதிகாரத்தை குவித்துக் கொள்வதில் உள்ள வேட்கையே இத்தகைய துண்டாட்ட நிகழ்ச்சி நிரலின் ஒற்றைக் காரணியாக உள்ளது.
Recommended Video

கொங்கு நாடு- புறக்கணிப்போம்
கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் மடிந்துகொண்டிருக்கும் சூழலிலும், அதிலிருந்து மீள தேவையான அக்கறையை காட்டாத சங்க பரிவாரத்தினர், திசை திருப்பல் நோக்கில் மக்களை துண்டாட முன்னெடுக்கும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டு நலனை பின்னுக்குத்தள்ளி, சொந்த சுயநல அரசியல் நோக்கம் மட்டுமே கொண்டு இயங்கும் சங்க பரிவாரத்தின் நோக்கத்தை உணர்ந்து தமிழக மக்கள் இந்த முழக்கத்தை முற்றிலும் புறந்தள்ள வேண்டுமென்று தமிழக மக்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
-
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..










Click it and Unblock the Notifications