Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ரியா ராஜன் பேச..பேச..குறுக்கே புகுந்த கம்யூனிஸ்டுகள்..மாநகராட்சி மீட்டிங்கில் திடுக்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ப்ரியா ராஜன் பேசுவதற்கு கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் வரி மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Chennai income tax priya rajan

தொழில் வரியை 35% உயர்த்த நேற்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2018ல் தொழில் வரி உயர்த்தப்பட்ட நிலையில் 5 வருடங்கள் கழித்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்போது 35% உயர்த்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் மாத வருமானம் ரூ.21,000-க்குள் இருந்தால் தொழில் வரி வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.21,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.135ல் இருந்து ரூ.180ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.690ல் இருந்து ரூ.930 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தொழில் வரியை வருமானதாரர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ப்ரியா ராஜன் பேசுவதற்கு கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கான அறிவிப்பை பிரியா ராஜன் வெளியிடுகையில் அதற்கு சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில்.. வரியை ஏற்ற கூடாது என்று மீண்டும் மீண்டும் கோஷம் போட்டனர். இதனால் மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் வரி மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படி 5 வருடத்திற்கு ஒரு முறை வரி உயர்த்தப்படவில்லை என்றால் நாம் கடன் வாங்க வேண்டி இருக்கும்.

வெளியே கடன் வாங்கினால் அதை அடைக்க மீண்டும் மக்கள் மீதே சுமை ஏற்றப்படும். அதை தவிர்க்க குறைந்தபட்ச வரி உயர்வை இப்போது மேற்கொள்வதே சரி என்று மேயர் பிரியா ராஜன் விளக்கம் கொடுத்தார். அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனும் இதே விளக்கத்தை கொடுத்தார். இதன் பிணைப்பே கோஷம் போட்ட கவுன்சிலர்கள் அமைதி ஆனார்கள்.

ஜே. குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., நல்ல அனுபவம் கொண்டவர். 2004 ஆம் ஆண்டு அனுபவ இந்திய நிர்வாகப் பணியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பதவிகளில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். 19 வருட ஆட்சியில் முதல் 4-5 வருடங்கள் திமுக ஆட்சிக்கு கீழ்தான் இவர் ட்ரெயினிங் எடுத்தார்.

அதன்பின் பல்வேறு துறைகளில் இவர் செயலாளர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இவர் பதவி ஏற்றுள்ளார். ராதாகிருஷ்ணன் இந்த பதவியில் இருந்து இன்று மாறிய நிலையில் குமரகுருபரன் பதவி மாறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+