சென்னை- கொல்லம் ரயில் பெட்டியில் விரிசல்..துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்-பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சென்னை: சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயில்வே அதிகாரிகள் அந்த பெட்டியை கழற்றி விட்டனர். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது பற்றிய முழு விவரத்தை இங்கே பார்ப்போம்.
மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பெங்களூரு - கொல்கத்தா சென்ற ஹவ்ரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கியது. அதிவேக வேகத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயில் பெட்டிகள் பறந்தன. தண்டவாளத்தில் ஒன்றின் மீது ஒன்றாக ரயில் பெட்டிகள் ஊடுருவி சின்னாபின்னமாகி கிடந்தது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றது. போர்க்களம் போல அந்த இடமே ரத்தமும் சதையுமாக காட்சி அளித்தது.
இந்த பயங்கர விபத்தில் 275 பயணிகள் உயிரிழந்ததாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சிகள் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகின்றன. எனினும் ரயில் விபத்துக்குள்ளானதற்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என்றும் காரணமானவர்களை கண்டுபிடித்து விட்டதாகவும் கூறிய அமைச்சர், அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல எனக் கூறி ராஜினாமா கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இதனிடையே, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடைபெறும் இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்பான பயணமாக ரயில் பயணமே கருதப்படும் நிலையில், நாங்கள் எதை நம்பி பயணிப்பது என பயணிகளும் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர். இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைத்துள்ள உயர்மட்ட விசாரணைக்குழு அறிக்கை கொடுத்த பிறகே அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.
இதனிடையே, கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ்(16102) ரயிலின் எஸ் 3 பெட்டியின் அடிப்பகுதியில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்த ரயில் பெட்டியை செங்கோட்டையில் அதிகாரிகள் கழற்றிவிட்டனர். உரிய நேரத்தில் ரயில் பெட்டி கழற்றி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மதுரையில் கழற்றிவிடப்பட்ட எஸ். 3 கோச்சிற்கு பதிலாக வேறு பெட்டி இணைக்கப்பட்டது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
இனி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தால் நோ ரீஃபண்ட்.. ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications