இது தொடர வேண்டும், தீவிரவாதிகளை அழியுங்கள்.. சுப்பிரமணி, சிவச்சந்திரன் மனைவியர் ஆவேசம்
தீவிரவாதத்தை வேறோடு ஒழியுங்கள் என்று சுப்பிரமணி மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: "தீவிரவாதிகளை வேரோடு அழியுங்கள்" என்று தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியின் மனைவிகளான இளம் விதவைகள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40-க்கும் மேற்பட்டோரில் 2 தமிழக வீரர்களும் அடக்கம். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன். இருவருக்கும் சின்ன வயசு. இருவருமே திருமணம் ஆனவர்கள்.
இதில், சுப்பிரமணிக்கு குழந்தை இல்லை. கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம்தான் ஆகிறது. சிவசந்திரனுக்கு 2 வயதில் குழந்தை உள்ள நிலையில் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இதனால் கணவன் இறந்ததை கூட கர்ப்பிணி பெண்ணிடம் சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டது.

மனைவிகள்
இரு வீரர்களின் மரணத்தால் அவர்களின் கிராமமே அழுதது. இன்று பயங்கரவாதிகளின் மீதான விமான படை தாக்குதலை இந்தியா கையாண்டது. 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை இரு வீரர்களின் மனைவிகளும் பாராட்டி உள்ளனர்.

இடியாக விழுந்த செய்தி
கணவரின் மரணத்திலிருந்து இருவராலும் இன்னும் மீள முடியவில்லை, ஏனென்றால், இவர்கள் இருவருமே கடைசியாக தாக்குதலுக்கு முன்பு மனைவிமார்களிடம்தான் பேசியிருக்கிறார்கள். ஸ்ரீநகருக்கு போகிறோம் என்று போனில் தகவலை சொல்லிவிட்டுதான் கிளம்பி சென்றிருக்கிறார்கள். இதற்கு பிறகுதான் அந்த செய்தி இடியாக வந்துவிழுந்தது.

பேட்டி
இப்போது, விமானப்படை தாக்குதலை வரவேற்பதாக சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர வேண்டும் என்றும் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றும் விடுத்திருக்கிறார்.

அழியுங்கள்
இதேபோல சிவசந்திரன் மனைவி, விமானப்படை தாக்குதல்குறித்து சொல்லும்போது, தீவிரவாதிகளை வேரோடு அழியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications