கஜா பாதிப்பே இன்னும் அகலவில்லை.. அதற்குள் வந்துவிட்டது ஃபனி புயல்.. அரசு இப்போதாவது சுதாரிக்குமா?
ஃபனி புயல் தமிழகத்தை நோக்கி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றுள்ள நிலையில், தமிழக அரசு இந்த முறையாவது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: ஃபனி புயல் தமிழகத்தை நோக்கி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றுள்ள நிலையில், தமிழக அரசு இந்த முறையாவது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தை இன்னும் சில நாட்களில் ஃபனி புயல் தாக்க உள்ளது. இந்த புயல் இன்னும் முழுதாக உருவாகவில்லை. ஆனால் இது கண்டிப்பாக தமிழகத்தை தாக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
வானிலை மைய அதிகாரிகள் இதற்காக தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ளனர். இந்த வாரம் தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

என்ன நிலை
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேரம் செல்ல செல்ல வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கஜா புயல்
கடந்த வருடம்தான் தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. தமிழகத்தை தாக்கிய மோசமான புயல்களில் கஜா புயலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்கள் இந்த புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை.

இப்போது என்ன
கஜா புயலின் போது தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று புகார் வந்தது. புயலின் அன்று அரசு கொஞ்சம் தீவிரமாக செயல்பட்டாலும், புயலுக்கு பின்பாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். தென்னை மரங்கள் அதிகம் விழுந்ததால் மக்கள் பெரிய நஷ்டத்திற்கு உள்ளானார்கள்.

பெரிய விமர்சனம்
தமிழக அரசின் இந்த மெத்தனப்போக்கு பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல் மத்திய அரசும் கஜா புயல் நிவாரணத்தை பெரிய அளவில் அளிக்கவில்லை. இந்த கஜா புயல் தமிழக தேர்தல் களத்திலும், பிரச்சார களத்திலும் மிக முக்கியமான ஒன்றாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

இப்போதுதான் முக்கியம்
இந்த நிலையில் தமிழக அரசு இந்த முறையாவது புயலுக்கு முன் சுதாரிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. குறைந்தபட்சம், ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் முன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications