Nivar புயல் முன்னெச்சரிக்கை.. அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை.. மக்களை பாதுகாக்க நடவடிக்கை
சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வரும் 25ம் தேதி பிற்பகல், மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது தீவிர புயலாக மாறி மணிக்கு அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.

முதல்வர் ஆலோசனை
இந்த நிலையில்தான், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 1 மணி முதல் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அதிக முன்னெச்சரிக்கை
புயல் திசையை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாலாயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 120 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும் என்பதால், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்பான இடம்
இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு, அதிகாரிகளுக்கு முதல்வர் சில உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புயல் வீசும்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மின் கம்பங்கள்
மின்கம்பங்கள் சாய்ந்ததால் உடனடியாக மின் கம்பங்களை பொருத்தி மின்இணைப்பை கூடிய விரைவில் வழங்குவதற்கு உரிய ஊழியர்களை நியமனம் செய்து தயார் நிலையில் வைத்திருப்பது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications