அதி தீவிர புயலாக கரையை கடக்கிறது நிவர்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: நிவர் புயல், அதி தீவிர புயலாக, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வலுவடைந்து புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புதன்கிழமை மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

சென்னையிலிருந்து தூரம்
சென்னையிலிருந்து 590 கிலோமீட்டர், புதுச்சேரியிலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கிறது. வங்கக்கடலில் நிவர் தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் கரையை கடக்கும்.

பிற்பகலில் கரையை கடக்கும்
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் சென்னையை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. நிவர் தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் கரையை கடக்கும். நாளை மறுநாள் பிற்பகலில் புயல் கரையை கடக்கும். ஒருவேளை புயல் வேகம் தாமதமானால், மாலை அல்லது இரவில் கரையை கடக்கும்.

அதிக மழை
நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் 24ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் பகுதிகளில் அதிக கன மழை வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிப்பு
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், பல மாவட்டங்களில் 26ம் தேதி மின்சாரம் துண்டிக்கப்படும். இதை மின்சாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். போதிய மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications