சென்னையில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து.. ஜஸ்ட் மிஸ்.. உயிர் தப்பிய 5 பேர்! பரபர!
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பி உள்ளனர். தேனாம்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
தேனாம்பேட்டையில் சேகர் என்பவரது வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பி உள்ளனர். உடனடியாக வந்த தேனாம்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். வீட்டில் இருந்த டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

சிலிண்டர் வெடித்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications