"கமலாலயம்.." கிண்டல் செய்த உதயநிதி.. "காரில் இலங்கை போய் பார்க்கட்டும்.." கொந்தளிக்கும் ஜெயக்குமார்
சென்னை: உதயநிதியின் கார் இலங்கைக்கு சென்றால் அங்கு இலங்கை தமிழர்களின் ஆவி சும்மா விடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Recommended Video
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5ஆவது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில் திமுக ஆட்சியில் கவர்னர் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லை. தலையே சரியில்லாத நேரத்தில் வால் எப்படி சரியாக இருக்கும்.

திமுக அரசு
திமுக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 ஐ நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்துள்ளார். இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும்.

தண்டனை
அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்கள் தடுக்கப்பட முடியும். போலீஸார் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாகத்தான் அமையும். திமுக அரசின் மக்கள் விரோத செயல் குறித்து அதன் கூட்டணி கட்சிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை.

உதயநிதி கார்
இதையெல்லாம் மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி எனது காரை எடுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் கமலாலயம் செல்ல வேண்டாம் என உதயநிதி சொல்லியது சரியில்லை. உதயநிதி அவரது காரை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு செல்லட்டும். அங்கு 1.5 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அவரை சும்மா விடாது.

மின்சார தட்டுப்பாடு
செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டு, அரசின் மீது திமுக அரசு பழி போட்டுள்ளது. ரூ 2,113 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்டப்படுத்தும் இந்த பாவம் சும்மா விடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications