திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்கு
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க டி.ராஜா வழக்கு தொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் வழக்கு தொடர்ந்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன.
மேலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக பொறுத்தவரை திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக கூறியதுடன், அதற்கான விருப்ப வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

ஆதரவு தந்தது
திமுகவும் தேர்தலுக்கு தயார் என்று சொன்னது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுகவுக்கு பேராதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று அறிவித்ததுடன், அக்கட்சியின் மாநில செயலாளர்.முத்தரசன் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட்
ஆனால் கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் திருவாரூர் தொகுதியில் நடந்து வருவதால் இடைத்தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

டி.ராஜா மனு
இதன் அடிப்படையில், தற்போது இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி அக்கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இது சம்பந்தமான மனுவினை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். மேலும் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதே காரணம்தான்
ஏற்கனவே அதிமுக தரப்பில் எம்பி தம்பிதுரையும் இதே காரணத்தை கூறிதான், தேர்தலை தள்ளி வைக்க சொன்னார். இப்போது, நேற்று திமுகவுக்கு ஆதரவு கொடுத்த இந்திய கம்யூனிஸ்ம் கட்சியும் இதே காரணத்தை சொல்லி, தேர்தலை தள்ளி வைக்க கோருகிறது.

நிர்மல்ராஜ்
திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அம்மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நிர்மல் ராஜ் தெரிவித்த நிலையில், பிரதான கட்சிகளே இப்படி தேர்தலை தள்ளி வைக்க சொல்லி வழக்கு போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications