திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்கு
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க டி.ராஜா வழக்கு தொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் வழக்கு தொடர்ந்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன.
மேலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக பொறுத்தவரை திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக கூறியதுடன், அதற்கான விருப்ப வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

ஆதரவு தந்தது
திமுகவும் தேர்தலுக்கு தயார் என்று சொன்னது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுகவுக்கு பேராதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று அறிவித்ததுடன், அக்கட்சியின் மாநில செயலாளர்.முத்தரசன் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட்
ஆனால் கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் திருவாரூர் தொகுதியில் நடந்து வருவதால் இடைத்தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

டி.ராஜா மனு
இதன் அடிப்படையில், தற்போது இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி அக்கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இது சம்பந்தமான மனுவினை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளார். மேலும் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதே காரணம்தான்
ஏற்கனவே அதிமுக தரப்பில் எம்பி தம்பிதுரையும் இதே காரணத்தை கூறிதான், தேர்தலை தள்ளி வைக்க சொன்னார். இப்போது, நேற்று திமுகவுக்கு ஆதரவு கொடுத்த இந்திய கம்யூனிஸ்ம் கட்சியும் இதே காரணத்தை சொல்லி, தேர்தலை தள்ளி வைக்க கோருகிறது.

நிர்மல்ராஜ்
திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அம்மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நிர்மல் ராஜ் தெரிவித்த நிலையில், பிரதான கட்சிகளே இப்படி தேர்தலை தள்ளி வைக்க சொல்லி வழக்கு போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications