சென்னை புறநகர் ரயில்களில் போறவங்களா நீங்க.. புதிதாக அறிமுகமான புதிய வசதி.. செம்ம!
சென்னை: UTS Mobile App மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள், சீசன், நடைமேடை டிக்கெட்டுகளை இப்போது எடுப்பது இன்னும் எளிதாகி உள்ளது. ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, 'ஜியோ-ஃபென்சிங்' வரம்புகள் இல்லாமல் டிக்கெட்டுகளை எடுக்க முடியும்.
காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், பயணிகள் டிக்கெட் வாங்குமிடத்தில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் நோக்கத்திலும் UTS Mobile App உருவாக்கப்பட்டது.

புறநகர் ரயில்களில் பயணிப்பதற்காக ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக் கொள்ள இந்த யுடிஎஸ் திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் நகரங்களில் புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுக்க மக்கள் யுடிஎஸ் ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். புறநகர் அல்லாத அனைத்து ரயில் நிலையங்களுக்கும் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்
இந்த யுடிஎஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்? இந்த யுடிஎஸ் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டு.
அதில், நமது பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண் உள்பட சில அடிப்படை தகவல்களை கொடுகக வேண்டும். செல்எண்ணை உறுதி செய்துகொள்வதற்காக ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒடிபி எஸ்எம்எஸ் ஆக வரும்.
அதை பதிவு செய்த பிறகு, லாக்-இன் செய்வதற்கான யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவை வழங்கப்படும். ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டருக்கு செல்லாமல் ஒரே நேரத்தில் 4 டிக்கெட்டுகளை வாங்கலாம். நடைமேடைக்கு மட்டும் செல்வதற்கான டிக்கெட், மாதந்திர சலுகை பாஸ் ஆகியவையும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வாங்கலாம்.

இந்நிலையில் இந்த செயலில் ஒரு குறை இருந்தது. புறநகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கும் போது, குறிப்பிட்ட மீட்டர் தூரத்தில் இருந்து தான் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று இருந்தது. அதற்கு மேல் போனால் டிக்கெட் எடுக்க முடியாத நிலை உள்ளது.இந்நிலையில் ரயில் நிலையங்களில் QR குறியீடு இப்போது நிறுவப்பட்டுள்ளது.இதன் மூலம், 'ஜியோ-ஃபென்சிங்' வரம்புகள் இல்லாமல் டிக்கெட்டுகளை எடுக்க முடியும். இதன் மூலம் ஸ்கேன் செய்து எளிதாக டிக்கெட் எடுக்க முடியும்.
அதேநேரம் புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சென்னையில் எத்தனை ரயில் நிலையங்களில் இந்த கியூஆர் கோடு ஸ்கேன் வசதி அறிமுகம் ஆகி உள்ளது என்பதை பாருங்கள். அதிலேயே எளிதாக டிக்கெட் எடுக்கலாம்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications