அந்தரங்க போட்டோக்களை வைத்து பிளாக் மெயில்? பார்வதி நாயருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக சுபாஷ் கைது
சென்னை: நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்தவர் பார்வதி நாயர், இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றியுள்ளார்.
இவர் நிமிர்ந்து நில் எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பு
இவர் நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் பணியாளராக இருந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் ரூ9 லட்சம் மதிப்புள்ள வாட்ச்கள், ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஐபோன், ரூ 2 லட்சம் மதிப்பிலான லேப்டாப்பை திருடி சென்றதாக பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நுங்கம்பாக்கம் போலீஸார்
இந்த புகாருக்கு நுங்கம்பாக்கம் போலீஸார் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி பார்வதி நாயரின் உதவியாளராக இருந்த சுபாஷ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சுபாஷ் மீது புகார்
இந்த நிலையில் தான் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ் மீது காலம்தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் பார்வதி நாயர் புகார் கொடுத்தார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ், தனக்கு தெரியாமல் தன்னை விதவிதமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

திருட்டு
அவர் ஒரு சைக்கோ. தன் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பொருட்களையும் திருடிச் சென்றார் என கண்ணீர் பேட்டி அளித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுபாஷ் மீண்டும் ஒரு புகாரை கொடுத்தார். அதில் நடிகை கொடுத்த புகாருக்கு மட்டும் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தான் கொடுத்த புகாருக்கு நடிகை பார்வதி நாயரிடம் இன்னம் விசாரணை கூட நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

3 பிரிவுகளின் கீழ் வழக்கு
மேலும் பார்வதி நாயரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் தான் சில விஷயங்களை பார்த்துவிட்டதால் அதை நான் வெளியே சொல்லிவிடுவேனோ என்ற பயத்தில் பார்வதி நாயர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என கூறி பரபரப்பை கிளப்பிய சுபாஷ், தனக்கு நடிகை கொலை மிரட்டலையும் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கொலை மிரட்டல்
மேலும் பார்வதி நாயர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமானாலும் போலீஸில் காட்டி விடுவேன் என்றார். இந்த நிலையில் சுபாஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் மீது பார்வதி நாயர் ஒரு புகாரை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதன் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் சுபாஷ் மீது கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று சுபாஷை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications