Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டசபையில் 3வது நாள் கூட்டம் தொடங்கியது.. கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஜனவரி 6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்திருந்தார். ஆனால் சட்டப்பேரவை தொடங்கிய உடன் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி உடனடியாக வெளியேறினார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

tamil nadu assembly session dmk tn assembly

நேற்று 2வது நாளாக சட்டப்பேரவை கூடியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், மேல்மலையனூர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, இன்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 10 ஆம் தேதி வரை இந்த விவாதம் நடைபெறும். இந்த கூடத்தொடரின் இறுதி நாளான 11 ஆம் தேதி, விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் 9.30 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் வாசித்து அவையைத் தொடங்கினார் சபாநாயகர் அப்பாவு. அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு. ஜெகதீசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர். மேலும், டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம்" என்ற வாசகம் கொண்ட முகக்கவசங்களை அணிந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் விவாதம் தொடங்கியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விசிக உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நோடடீஸ் வழங்கியுள்ளது குறி்ப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+