இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?
சென்னை: தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இன்னமும் வேட்பாளர்களை தேர்வு செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு தேசிய கட்சிகளும் வேட்பாளர்களை அடையாளம் காணாமல் இருப்பது கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள 17-வது சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது. நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், பிரதான கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் வேட்பாளர் தேர்வு சிக்கல் நீடித்து வருகிறது.

ஆளும் திமுக 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து, அதில் 13 கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பொன்னேரி, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, சிவகாசி, நாங்குநேரி, குளச்சல், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கடலூர், சோளிங்கர், பென்னாகரம், உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட 17 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு இழுபறி தொடர்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பட்டியல் அளித்தாலும், அகில இந்திய தலைமைதான் ஒப்புதல் வழங்க வேண்டும். கட்சியில் நிலவும் கோஷ்டி மோதல்களாலும், பணம் பெற்று வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக ராகுல் காந்திக்கு சென்ற புகாராலும், அவர் கடும் கோபத்தில் உள்ளதாலும் வேட்பாளர் தேர்வு சிக்கலாகி உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும், விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அதிருப்தி நிலவுகிறது. முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது சூலூர் தொகுதிகளை விரும்பிய நிலையில், அதிமுக அதை எடுத்துக் கொண்டதால் மொடக்குறிச்சியில் போட்டியிட வற்புறுத்தியபோதும் தேர்தலில் ஒதுங்கிக் கொண்டார் என சொல்லப்படுகிறது.
மேலும், ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 5- ஐ மாற்றித் தருமாறு பாஜக மேலிடத் தலைவர்கள் அதிமுகவை வலியுறுத்துகின்றனர். அதிமுகவோ, ஏற்கனவே 165 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜகவின் கோரிக்கையால் தங்கள் வேட்பாளர்களும் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 கடைசி நாள், இடையில் 2 வேலை நாட்களே உள்ள நிலையில், தொகுதிகளை மாற்றி ஒதுக்க அதிமுகவுக்கு உள்ள நிர்பந்தம், சாத்தியமா என கேள்வியெழுப்புகிறது.
திமுக, அதிமுக கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் நீடிக்கும் இந்த வேட்பாளர் தேர்வு இழுபறி, தேர்தல் களத்தில் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications