போலி ஆவணங்களை தடுக்க பத்திரப் பதிவுத் துறை அதிரடி.. பத்திர நகல்களில் இந்த விவரங்கள் இருக்காது
சென்னை: பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் பிரதிகளை மூன்றாம் நபருக்கு வழங்கும் போது, ஆதார் உள்ளிட்ட அடையாள எண்களை அழித்து கொடுக்கும் பணியை பதிவுத்துறை தொடங்கியிருக்கிறது. போலி ஆவணங்கள் தயாரிப்பதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பதிவுத்துறை தொடங்கியுள்ளது. இது பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.
சொத்து வாங்குவது விற்பது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது பதிவுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது போக பொதுமக்களின் பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. இப்படி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சார்- பதிவாளர் அலுவலகத்தில் சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட நபரின் ஆதார், பான் எண் போன்றவை பெறப்படுவது வழக்கம். இந்த அடையாள சான்றுகளின் பிரதிகள் அனைத்தும் பத்திரத்தில் இணைக்கப்படும். இப்படி இணைக்கப்படும் அடையாள விவரங்கள் அனைத்தும் பத்திர பதிவு செய்த பிறகு, ஸ்கேன் செய்யப்படும். அப்படியே கம்ப்யூட்டரில் பதிவேற்றி விடுவார்கள். அதன்பிறகு அசல் பிரதி, சொத்து வாங்குபவர்களிடம் கொடுத்து விடுவார்கள். அதில் எந்த விபரங்களும் மறைக்கப்படாமல் முழுமையாக இருக்கும்.
அதேபோல, சொத்து வாங்கவோ, அது பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ளவோ யார் வேண்டும் என்றாலும் ஒரு சொத்தினுடைய பதிவு நகல்களை வாங்கும் வசதி இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பத்திரங்களின் நகல்கள் பிடிஎப் - கோப்பாக மின்னஞ்சலில் அனுப்பப்படுகிறது. இந்த நகலில் சொத்து விற்பவர், வாங்குபவர் மற்றும் சாட்சிகள் ஆகியோரது ஆதார், பான் எண் போன்ற விவரங்கள் அழிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரி கூறுகையில், "ஆதார், பான் என் பொன்ற அடையாள எண்களுடன், பிரதி பத்திரங்கள் பெறும் தேர்டு பார்ட்டிக்கு கொடுக்கக்கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களுடன் கொடுத்தால் அது போலி ஆவணங்கள் தயாரிக்க வழி வகை செய்கிறது. பத்திரப்பதிவு செய்வோரின் தனிப்பட்ட தகவல்களை, தொடர்பு இல்லாத மூன்றாம் நபர்களுக்கு கொடுப்பதை தடுக்கும் விதமாக, பத்திரத்தில் இந்த விபரங்கள் அழிக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன.
சொத்துக்களை வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள் பத்திரத்தின் பிரதியை பெற்று, அதில் தனிப்பட்ட விபரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்" என்று கூறினர். பத்திரப் பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை சொத்து வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஏனெனில் சொத்துக்களை வாங்குபவர்கள் அதை பத்திரமாக பாதுகாப்பதே பெரிய விஷயமாக உள்ளது. எனவே, போலி ஆவணங்கள் தயாரிப்பதை தடுக்கும் விதமாக பதிவான பத்திரங்களின் பிரதிகளை வழங்கும் போது, ஆதார் உள்ளிட்ட அடையாள எண்களை அழித்து கொடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications