சனாதன சர்ச்சை: உதயநிதி, பொன்முடி, ஆ.ராசா எம்.பி. மீது டெல்லி செம்ம கோபம்! ஏதோ பெருசா வெடிக்கும்?
சென்னை: சனாதன ஒழிப்பு சர்ச்சையில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி மற்றும் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது டெல்லி செம்ம கோபத்தில் கொந்தளித்து போய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின்: சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றனர். இம்மாநாட்டில் சனாதனத்தை எதிர்க்கக் கூடாது; ஒழிக்க வேண்டும்; டெங்கு, மலேரியா, காலரா போல ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுதான் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடியே, மத்திய அமைச்சரவையை கூட்டி சனாதனம் குறித்து பதிலடி தர உத்தரவிடும் அளவுக்கு நிலைமை படு சீரியசாகிவிட்டது. அதாவது அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சை டெல்லி மத்திய அரசு கடும் கோபத்துடன் பார்க்கிறது என்பதையே இது காட்டி வருகிறது.

பொன்முடி: இதனைத் தொடர்ந்து மற்றொரு அமைச்சர் பொன்முடி, சனாதனத்தை எதிர்த்து உருவானதுதான் திராவிடர் இயக்கம் என வழக்கம் போல தமிழ்நாட்டில் பேசுகிற கருத்தைத்தான் கூறினார். ஆனால் அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளால் கடும் நெருக்கடியில் இருக்கும் அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சையும் டெல்லி ரசிக்கவில்லை; கோபத்தை தூண்டும் வகையில் இருக்கிறது என அதிருப்தி காட்டியதாம். இதனையடுத்துதான் பொன்முடிக்கு எதிராகவும் இன்று மூத்த பாஜக தலைவர்கள் பெயரை குறிப்பிட்டே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆ.ராசா: முன்னாள் மத்திய அமைச்சரும் லோக்சபா எம்பியுமான ஆ.ராசா, உதயநிதிக்கு ஆதரவாக முழு வீச்சில் களம் கண்டவர். சனாதனத்தை தொழுநோய், ஹெச்.ஐ.வி. கிருமி, உலகை அச்சுறுத்தும் பயங்கரமான நோய் என தனக்கே உரித்தான கடுமையான சொற்களால், அம்பேத்கர் உள்ளிட்டோரது எழுத்துகளையும் பேச்சுகளையும் ஆதாரங்களை வைத்து விமர்சித்து கொண்டே இருக்கிறார். டெல்லியில் இருப்பவர்களுக்கும் பகிரங்க சவால் விடுத்தும் பேசிக் கொண்டிருக்கிறார். இதனையும் டெல்லி மேலிடம் ரசிக்கவில்லையாம். இதனையடுத்துதான் உதயநிதி, பொன்முடி, ஆ.ராசா படங்களுடன் வட இந்திய ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு 'இந்தியாவுக்கு பேராபத்து' போலவும் ஆகப் பெரிய பயங்கர குற்றம் செய்தவர்கள் போலவும் விவாதங்களை நடத்தி கொண்டிருக்கின்றனர்.
நெருங்குது நெருக்கடி?: அதேநேரத்தில் இப்படி திமுக ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் டெல்லி அதிகார மையத்துடன் மல்லுக்கட்டுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் திமுக தலைவர்கள் மீது இத்தகைய பேச்சுகள் அவர்கள் மீதான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் சீனியர் டெல்லி பத்திரிகையாளர்கள்.
ஏதோ ஒன்று நடக்கப் போகிறது!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications