ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா!
மயிலாடுதுறை: சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ, கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீர்காழி சட்டசபை தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாரதி தனக்கு தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்காததால், கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. சீர்காழி (தனி) தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர், அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவராகவும் உள்ளார். இதற்கு முன்பாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாரதி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 76,487 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.கிள்ளை ரவீந்தரனை விட கூடுதலாக 9,003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் பாரதி.
அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2021 சட்டசபை தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாரதி விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், சீர்காழி (தனி) தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சக்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நீண்ட காலமாகத் தொகுதியில் செல்வாக்குடன் விளங்கிய பி.வி.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பாரதி மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பாரதி, "சீர்காழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவின் மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தைக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளேன்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் நாகை மாவட்டச் செயலாளரும், மண்டலச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களோடு இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலையில், தனது மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேலும், என்றைக்கும் அதிமுகவுக்கும், கட்சி தலைமைக்கும் விசுவாசம் மிகுந்த தொண்டனாக செயல்படுவேன்" எனக் கூறினார். முன்னாள் எம்எல்ஏ பாரதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதேபோல, அதிமுகவில் இருந்து விலகியுள்ளார் மயிலாடுதுறை அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன். "அதிமுகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை. 2016 தேர்தலுக்காக வாங்கிக் கொடுத்த ரூ.25 லட்சம் கடனை திருப்பித் தராமல் ஓ.எஸ்.மணியன் ஏமாற்றிவிட்டார்" என சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுகவில் இருந்து விலகியுள்ளார் ஜனார்த்தனன்.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக் -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications