எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்.. எடப்பாடிக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின்.. பறிபோகும் ஓபிஎஸ் இடம்?
சென்னை: எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு இருப்பதால், விரைவில் எடப்பாடி பழனிசாமி அருகிலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி குழப்பம் காரணமாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஓ பன்னீர் செல்வத்தை துணைத்தலைவராக அங்கீகரிக்க கூடாது என்றும் புதிய துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமாரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்து இருப்பதாகவும் அதிமுக கூறியது.

இது தொடர்பாக சட்டசபையில் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் பல்வேறு முறை அதிமுக மூத்த எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தனர்.
எனினும், அவையில் இருக்கை ஒதுக்கும் விவகாரம் என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் அவை விதிகளின் படியே தான் செயல்படுவதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறி வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வைத்து பேசினார். அப்போது உடனே முதல்வர் முக ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேசினார். முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சிக்கு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர் பி உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருமாறு தொடர்ந்து இந்த அவையிலே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பலமுறை அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே இதே அவையில் அவைத்தலைவராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ? அதை அடிக்கடி நீங்கள் சுட்டிக்காட்டி சொல்கிறீர்கள். எனினும், இந்த விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "முதல்வர் பரிந்துரைப்படி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதிலளித்தார்.
எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டு இருப்பதால், விரைவில் எடப்பாடி பழனிசாமி அருகிலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையும் மாற்றி அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.
முன்னாள் முதல்வர் என்பதால் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் ஏதேனும் ஒரு இருக்கை ஓபன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்படலாம் என்று சட்டமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications