பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதில் 6 வகை... முழு விபரம் இதோ
சென்னை: பிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்துவோருக்கு நாளை (17-ந்தேதி) முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிப்பது 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி மாதம் முதல் தடை அமலுக்கு வந்தது. இந்தநிலையில், பிளாஸ்டிக் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக அதனை வாங்கி பயன்படுத்துபவர்கள், சிறிய கடைக்காரர்கள், கடைசியாக பொதுமக்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கும் வகையில், தனித் தனியாக அபராத கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட தொடக்கத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது போல் தெரிந்தாலும், நாட்கள் நகர, நகர வழக்கம் போல் பயன்பாடு பெருகியது. இதனைத் தொடர்ந்து, அதிகப்பட்ச அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களுக்கு அபராத கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவது முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
2-வது முறையில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருளை தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதன்பிறகும் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு சீல் வைக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ வினியோகம் செய்தாலோ முதலில் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதன்பிறகு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
வணிக ரீதியாக பயன்படுத்துவோருக்கு முதலில் ரூ.25 ஆயிரமும், 2-வது முறை பிடிபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
சிறிய பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் முதல் முறை ரூ.100-ம், 2-வது முறை ரூ.200-ம், 3-வது தடவை ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகளின் கடைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வீடுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும்போது முதல் முறையாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் ஒரு வீட் டில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தால் அபராத தொகை ரூ.1000-மாக உயர்த்தி வசூலிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதற்காக அதிகாரிகள் அதிரடி வேட்டைக்கு தயாராகி வருகிறார்கள். சென்னையில் 15 மண்டலங்களில் இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications