Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமான டிக்கெட் புக் பண்றீங்களா? இனி ஈஸியா கேன்சல் பண்ணலாம்.. வருகிறது புதிய வசதி.. DGCA அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமானப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, புதிய விதிகளை வகுத்து வருகிறது. இதன் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ரத்து செய்யவோ அல்லது திருத்தவோ பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பல காலமாக மக்கள் வைத்து வந்த இந்த கோரிக்கைகளை DGCA நிறைவேற்றி உள்ளது. டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறைகளில் கணிசமான மாற்றங்களை DGCA முன்மொழிந்துள்ளது. பயண முகவர் அல்லது ஆன்லைன் போர்டல் மூலம் டிக்கெட் வாங்கும் பட்சத்தில், "பணத்தைத் திரும்பப் பெறும் பொறுப்பு விமான நிறுவனத்தையே சாரும், ஏனெனில் முகவர்கள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள்" என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

DGCA flight

டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறை

DGCA-இன் வரைவு விதிகளின்படி, முன்பதிவு செய்த பிறகு 48 மணி நேரத்திற்கு "பரிசீலனை விருப்பத்தை" விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த 48 மணி நேரத்திற்குள், பயணிகள் தங்கள் டிக்கெட்டை எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் ரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். மாற்றப்பட்ட விமானத்திற்கான அன்றைய கட்டணம் மட்டும் பொருந்தும் என்று வரைவு கூறுகிறது.

இருப்பினும், இந்தச் சலுகை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உள்நாட்டு விமானப் பயணமாக இருந்தால், முன்பதிவு செய்த தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும், சர்வதேச விமானப் பயணமாக இருந்தால் 15 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் இந்த வசதி பொருந்தாது. மேலும், இது நேரடியாக விமான நிறுவனத்தின் இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

DGCA-இன் வரைவு விதி

ஆரம்ப முன்பதிவு நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குப் பிறகு, இந்த விருப்பம் கிடைக்காது. அப்போது பயணிகள் திருத்தங்களுக்கான ரத்துக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் தேவை (CAR) வரைவு குறிப்பிடுகிறது.

DGCA, டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் CAR விதிகளின் விரிவான மாற்றங்களின் ஒரு பகுதியாக, 21 வேலை நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறையை விமான நிறுவனங்கள் முடிக்க வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளது.

மேலும் ஒரு முக்கிய முன்மொழிவாக, "விமான நிறுவனம் தனது இணையதளம் மூலம் நேரடியாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் உள்ள அதே நபரின் பெயரில் உள்ள பிழையை, முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பயணிகள் சுட்டிக்காட்டினால், எந்தக் கூடுதல் கட்டணமும் விதிக்கக் கூடாது" என்று வரைவு குறிப்பிடுகிறது.

எந்தக் கூடுதல் கட்டணமும் விதிக்கக் கூடாது

மருத்துவ அவசரநிலை காரணமாகப் பயணிகள் தங்கள் முன்பதிவை ரத்து செய்யும் பட்சத்தில், விமான நிறுவனங்கள் டிக்கெட் பணத்தைத் திரும்ப அளிக்கலாம் அல்லது அதற்குப் பதிலாக கடன் கூப்பன் (credit shell) வழங்கலாம் என்றும் DGCA பரிந்துரைத்துள்ளது.

விமான டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டணங்கள் குறித்துப் பயணிகளிடமிருந்து தொடர்ச்சியான புகார்களும் கவலைகளும் எழுந்து வரும் சூழலில், இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த வரைவு திட்டம் குறித்த கருத்துக்களை நவம்பர் 30 வரை, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ஒழுங்குமுறை ஆணையம் கோரியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+