பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது- டிஜிபி புதிய உத்தரவு
சென்னை: பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
செல்போனை பயன்படுத்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது போல் சில தனியார் நிறுவனங்களிலும் , ஐடி கம்பெனிகளிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காவலர்களும் செல்போனை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில் பாதுகாப்பு பணியின் போது வாட்ஸ் ஆப் தகவலை சில காவலர்கள் பார்க்கின்றனர்.
முக்கியமான நேரங்களில் செல்போனில் காவலர்கள் மூழ்கிவிடுகின்றனர். எனவே
எஸ்ஐ-க்கு மேலான பொறுப்பில் உள்ளவர் மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
அவர்களும் பணியில் இருக்கும் போது காவல் பணிக்காக மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று கூறி பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications