யாரா இருந்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்தான்.. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் சஸ்பெண்ட்! போலீசுக்கு உத்தரவு
சென்னை: பைக்கில் செல்லும் போது போலீஸ்காரர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களை சஸ்பெண்ட் செய்யலாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை போலீஸ்காரர்களே மீறக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் விதிக்கப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என விதி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமீறலுக்கு அபராதம் போடப்படுகிறது.

அதேவேளையில், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரே பல நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் பயணிப்பது என போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்க விட்டு செல்கிறார்கள். இது தொடர்பாக சில நேரங்களில் வாகன ஓட்டிகள் அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுகிறார்கள். ஒரு சில போலீசாரின் இந்த போக்குவரத்து விதி மீறல் காவல்துறையினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.
போலீசார் சில நேரங்களில் அபராதம் விதிக்கும் போது கூட அந்த வழியாக சில போலீஸ்காரர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வதையும் அதை சுட்டிக்காட்டி வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்வது என போக்குவரத்து போலீசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், போலீசார் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் போலீசார் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:- காவல்துறையில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். காரில் செல்லும் போது முறையாக சீட் பெல்ட் அணிய வேண்டும். பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். இத்தகைய உத்தரவை காவலர் நிலையில் உள்ள சில போலீசார் பின்பற்றுவது இல்லை.
இவர்களால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். காலை 7 மணிக்கு போலீசார் தங்களின் வருகை பதிவு செக் செய்யப்படும் ரோல் காலின் போது, போலீசார் பைக்கில் வருபவர்களாக இருந்தால் தங்களிடம் ஹெல்மெட் இருப்பதை காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஹெல்மெட் இல்லாத போலீசாரை பைக் ஓட்ட அனுமதி அளிக்க கூடாது. அவர்கள் ஹெல்மெட் வாங்கி வந்து ரசீதை காட்டிய பிறகே பைக் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறினர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications