தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி கேள்வி.. கடுப்பான கஸ்தூரி ராஜா! 27ம் தேதி தீர்ப்பு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவதாக அறிவித்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் இருவரும் விவாகரத்துக்கு முழு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுவதால், மீண்டும் இணைய வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.
இந்த நிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். "இது நமக்கு சம்பந்தமில்லாத கேள்வி. நீங்கள் கேட்கக்கூடாது" என்று கூறி, பத்திரிகையாளர்களை சந்திப்பதை கூட தவிர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஏன் பிரிந்தனர்?: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தனுஷின் செயல்பாடுகள், ரஜினிகாந்த் குடும்பத்தினர் தனுஷின் குடும்பத்தை மதிக்காதது போன்ற காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. தனுஷ், போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை கட்டியது, ரஜினிகாந்த் இருவரையும் இணைக்க விரும்பினார் போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் ஏமாற்றம்: இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக நம்பிய ரசிகர்கள், தற்போதைய நிலவரத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர். வரும் 27ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
கஸ்தூரி ராஜா கோபம்: கஸ்தூரி ராஜாவின் கோபமான பதில், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அவரது குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளதைக் காட்டுகிறது. மகனின் பிரிவு குறித்து அவர் மிகவும் கவலைப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விகளுக்காகத்தான் நான் நிருபர்களையே சந்திப்பது இல்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.
இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications