ஆதீனத்தின் பல்லக்கு- தி.க., பெரியார். தி.க. அமைப்புகளை தடை செய்ய கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தல்
சென்னை: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக சி.ஆறுமுகம் இன்று வெளியிட்ட அறிக்கை: இன்று வரை தமிழ் பணியை செய்வதோடு சைவ சமய பக்தர்களுக்கு சமய வகுப்புகள்,
மாணவர்களுக்கு கல்வி, பொதுமக்களுக்கு மருத்துவ உதவி,தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி அளிப்பது,ஆதி சைவ சிவாச்சாரியார்களுக்கு
பாட சாலை, தேவாரம், திருவாசகம் வகுப்புகள், அன்னதானம், வேளாளர் ஆதீனங்களுக்கே உண்டான 32 அறங்களையும் திறம்பட செய்து வருகிறார் தருமைப்புர சன்னிதானம் அவர்கள்!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த சன்னிதானத்தை பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து பட்டிண வழிபாட்டிற்கு அழைத்து வருவது சைவ சமய தொண்டர்கள் வழிபாட்டு முறையில் ஒன்றாகும்! ஆனால், தமிழர் வழிபாட்டின் மீதும், வேளாளர் ஆதினங்களின் மேலும் காழ்ப்புணர்ச்சி கொண்டும், குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் தன்னிருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் திக,விசிக, தந்தை பெரியார் திராவிடர் கழகம்,போன்றவை ஆதீனத்திற்கு எதிராக போராட்டம் செய்வோம் என பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டி விடுவதை கொங்கு மக்கள் முன்னணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த சன்னிதானத்தை பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து பட்டிண வழிபாட்டிற்கு அழைத்து வருவது சைவ சமய தொண்டர்கள் வழிபாட்டு முறையில் ஒன்றாகும்! ஆனால், தமிழர் வழிபாட்டின் மீதும், வேளாளர் ஆதினங்களின் மேலும் காழ்ப்புணர்ச்சி கொண்டும், குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் தன்னிருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் திக,விசிக, தந்தை பெரியார் திராவிடர் கழகம்,போன்றவை ஆதீனத்திற்கு எதிராக போராட்டம் செய்வோம் என பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டி விடுவதை கொங்கு மக்கள் முன்னணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!

திகவுக்கு தடை
பகுத்தறிவு என்ற போர்வையில் மேற்கத்திய தனிமனித ஒழுங்கீன கலாச்சார வாழ்வியலை பரப்பியும், தமிழர் வழிபாட்டு நெறியியல் கட்டமைப்பை சீர்குழைத்திட பல்வேறு வகையில் தொடர்ந்து செயல்பட்டும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தும் வரும் திராவிடர் கழகம்,பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்!

இதை பேசுவீங்களா?
சமூக நீதி பேசுகின்ற இந்த அமைப்புகள் எல்லாம் எப்போதாவது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 200,100, என திரையரங்கு போல இறைவனை வணங்க கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து பேசாதது ஏன்? அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பாரளுமன்ற உறுப்பினர், ஆளும்கட்சி பிரமுகர் திரைப்பட நடிகர் நடிகைகள் என அனுமதிக்கப்படும் சிறப்பு வழி தரிசனங்களை எதிர்க்காதது ஏன்? சாதிய தீண்டாமையை எதிர்ப்பதாக வேடமிட்டு கொண்டு நவீனமயமாக அதிகார, பொருளாதார தீண்டாமைகளை கட்டமைத்தது ஏன்? பனமும், அதிகாரமும் உடையவன் கருவறை அருகிலும், ஏழை 50 அடி தூரத்திலும் இறைவனை கானும் அவலம் ஏன்? 50 அடி தூரத்தில் நின்று இறைவனை பார்த்தாலும் அவனை தள்ளிவிட்டு அவமதிப்பது ஏன்??? இது அவர்கள் கண்களுக்கு தெரிந்தும் பேசாதது ஏன்??

வழிபாடு மீதான வன்மம்
இதையெல்லாம் கண்டிக்காத, எதிர்க்காத இவர்கள் எல்லோரையும் சமமாக இறைவனை வழிபட அனுமதிக்கும் ஆதீனங்களுக்கு எதிராக போராடுவது தமிழர் வழிபாட்டின் மீது கொண்ட வன்மமே ஆகும்!இவர்கள் ஆதினங்களுக்கு எதிராக போராடினால் கொங்கு வேளாளர்கள் சமூகம் ஆதினங்களுக்கு ஆதரவாகவும், போராடுபவர்களுக்கு எதிராகவும் இருக்கும் என்பதை கொங்கு மக்கள் முன்னணி சார்பாகவே தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications