மத்திய அரசிடம் எதை கேட்டாலும் 'நஹி... நஹி' தான்! அடப்பாவிகளா என்று கூறி நொந்துகொண்ட தயாநிதி மாறன்!
சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்பாக எதைக் கேட்டாலும் நஹி நஹி என்பதை தான் பதிலாக கூறுகிறார்களே தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை என தயாநிதி மாறன் எம்.பி. வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா மொழியை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என அவர் வினவினார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

திமுக பொதுக்கூட்டம்
தமிழக நிதி நிலை அறிக்கையை விளக்கியும், உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் சென்னை சோழிங்கநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதைக் கேட்டாலும் நஹி நஹி என்பதை தவிர வேறு எதையும் பதிலாக சொல்வதில்லை என வேதனை தெரிவித்தார்.

நஹி நஹி
மேலும், நாட்டில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா மொழியை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என அவர் வினவினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி நாடாளுமன்றத்தில் பேசவே அனுமதி மறுக்கிறார்கள் என்றும் திமுக எம்.பி.க்கள் தலைகீழாக நின்றும் விலை உயர்வை பற்றி பேசவிடவில்லை எனவும் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் மா.சு.
ஆங்கிலம் படித்ததால் தான் இன்று கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை என்ற நபர் இருப்பதாகவும் அடப்பாவிகளா மொழியை பற்றி பேசுவதை தவிர வேறு ஒன்றுமே உங்களுக்கு கிடைக்கவில்லையா எனவும் தயாநிதி நொந்துகொண்டார். அவருக்கு முன்னதாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் அமைசர்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் கொரோனாவால் கடந்த ஒரு மாதமாக ஒரு உயிரிழப்பு கூட தமிழகத்தில் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பூஜ்யம் என்ற நிலை
மேலும், தற்போது நாளொன்றுக்கு 20 என்கிற அளவில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் இருந்து வருவதாகவும் இது ஒரு பெரிய எண்ணிக்கை இல்லை எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் காட்டிய வேகமும், அவர் முன்னெடுத்த தீவிர நடவடிக்கையுமே தமிழகத்தில் கொரோனா குறைந்ததற்கு காரணம் எனக் கூறினார். ஏறத்தாழ 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்யம் என்ற நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications