"கூட்டாளி" ராம்குமார்.. லைம்லைட்டில் பாஜக "புள்ளி".. வளைந்து நெளியும் "பேரறிஞர்".. முத்தரசன் பொளேர்
ராம்குமாருக்கு கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் அறிக்கை விட்டு பதிலடி தந்துள்ளார்
சென்னை: ஒன்றிய அரசின் அரசியல் செல்வாக்கின் அழுத்தங்களுக்கு ராம்குமார் வளைந்து, நெளியலாம். வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று மூத்த தலைவர் முத்தரசன் பதிலடி தந்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், அவர் தான் வாங்கிய செவாலியர் விருதை மோடிக்கு வழங்கி இருப்பார்.. அந்த அளவுக்கு மோடி நடித்து வருகிறார்" என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பாஜகவின் ராம்குமார் கொந்தளித்து அறிக்கை விட்டிருந்தார்.. அதில், முத்தரசனை சரமாரியாக விமர்சித்திருந்தார்.

ராம்குமார் காட்டம்
மேலும், தனிப்பட்ட நபர்களை விமர்சனம் செய்வதற்காக என்னுடைய தந்தை சிவாஜி பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன், சிவாஜி இன்று இருந்திருந்தால் பிரதமர் மோடியையும், பாஜகவையும் ஆதரித்திருப்பார். உலக அரங்கில் மோடியால் பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்திருப்பார். பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை பிரதமர் கடைப்பிடித்து வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதே பாணியைப் பின்பற்றி வெற்றி நடைபோடுகிறார்" என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

முத்தரசன் பதிலடி
இந்நிலையில், ராம்குமாரின் அறிக்கைக்கு, முத்தரசன் பதிலடி தந்துள்ளார்.. அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் "பிரதமர் நரேந்திர மோடி" குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது "தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம்" என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக ராம்குமார்
ராம்குமார் சிவாஜி கணேசன் உயிரியல் வழி தந்தையாவார். ஆனால், என் போன்ற கோடிக்கணக்கானவர்கள் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்து வரும் "நடிப்புலகின் மேதையாவார்". எண்ணிலடங்கா பாத்திரங்களில் வாழ்ந்து வரும் அவரது நடிப்புத்திறன் எதிர்வரும் தலைமுறையும் கற்றறிய வேண்டிய கலைத்துறையின் இலக்கணமாகும் என்பதை எவரும் மறுக்க முடியாது. எட்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வரும் பிரதமர் மோடியின் "உண்மை கலவாத சுத்தமான பொய் மூட்டை" வியாபாரத்துக்கு ராம்குமார் கூட்டாளியாகி இருப்பதை அவரது அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பிரதமர் மோடி
நடிகர் திலகத்தின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்ந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு வகுப்புவாத சக்திகள் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட நிலையில் "கருப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் வைப்பு நிதியாக செலுத்துவோம்" என்று உணர்ச்சி பொங்க உறுதியளித்தார்களா? இல்லையா? விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாகவும், ஆண்டுக்கு 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதாகவும் மேடைக்கு, மேடை முழங்கினார்களா? இல்லையா? கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து, மாநில உரிமைகளைப் பறித்து, தனிநபரை மையப்படுத்திய, சர்வாதிகார வழியில், பாசிச ஆட்சிமுறைக்கு நாட்டை நகர்த்தி செல்வதை மறுக்க முடியுமா?

பேரறிஞர் ராம்குமார்
இவைகள் குறித்து சிந்தனை தெளிவு ஏற்படாமல் தடுக்க ராம்குமார் போன்றவர்களை பாஜக களம் இறக்கி வருகிறது. மாநில உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் சாரதியாக முன்னின்று செயல்படும், திமுகழகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை 'அரைகுறை ஞானம்' கொண்டவர்களும் உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து கொள்ளும்போது 'பேரறிஞர்' ராம்குமார் அறியாமையில் இருப்பது வரலாற்று துயரம்தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராம்குமாருக்கு உயிரியல் தந்தையாவார் மறுக்கவில்லை. ஆனால், அந்த மாமனிதன் வாழ்ந்த வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு உணர்வில் கலந்து உறவில் இருந்து வந்தார்.

வளைந்து நெளியும் ராம்குமார்
மயிலாடுதுறையில் நாடகம் நடத்தி நிதி திரட்டி கொடுத்ததையும், காவிரி நதிநீர் பிரச்சனைக்காக மனித சங்கிலி போராட்டத்தை கட்சி முன்னெடுத்த போது ஆக்கம் கொடுத்து ஊக்கப்படுத்தியதையும் என்றென்றும் நினைவு கூர்ந்து வருகிறது. ஒன்றிய அரசின் அரசியல் செல்வாக்கின் அழுத்தங்களுக்கு ராம்குமார் வளைந்து, நெளியலாம். வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை ராம்குமாருக்கும் அவர் மூலம் அறிக்கை வெளியிட்ட சக்திகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார்












Click it and Unblock the Notifications