ஈரோடு கிழக்கு: திமுகவுக்கு ஃபர்ஸ்ட் பிளேஸ்! ஆனால் நாதகவுக்கு 2வது இடம்னு சொல்ல முடியாதே! ஏன்?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் உயர்ந்துள்ள போதிலும் அக்கட்சி இரண்டாவது இடம் பிடித்துவிட்டது என சொல்ல முடியாது. ஏன் தெரியுமா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் எம்.கே.சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இதில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது போல் திமுகவே வெற்றி பெற்றது. அதிலும் சாதாரண வெற்றி இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற கட்சி திமுக என்றும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் என்றும் சாதனை படைக்கப்பட்டது.
அதாவது வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாதக சந்திரகுமார் 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டா 6,109 வாக்குகளை பெற்றது. 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவில் இருந்த சந்திரகுமார் 69,166 வாக்குகளை பெற்றிருந்தார்.
அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 64,879 வாக்குகளையும் 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சந்திரக்குமார் வென்றதற்கு பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் அவர் எடுத்த வாக்குகளை யாரும் பெற முடியவில்லை. இதனால் அவரே அதிக வாக்குகளை பெற்று வென்றவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இதன் பிறகு 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளை பெற்றிருந்தார். இதனால் இதுவரை அவரே அதிக வாக்குகளை பெற்றவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடந்த தேர்தலில் ஈவிகேஎஸ் சாதனையை சந்திரக்குமாரே முறியடித்து 1.15 லட்சம் வாக்குகளை பெற்று தனது சாதனையை திரும்ப பெற்றார். இதில் திமுகவின் வாக்கு சதவீதம் 74.70 ஆக உள்ளது.
அது போல் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியின் வாக்கு சதவீதம் 15.59 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த தேர்தலை காட்டிலும் 9.24 சதவீதம் கூடுதலாகும். இந்த தொகுதியில் போட்டியிட்ட நாதக கடந்த 2021 ஆம் ஆண்டு 7.65 சதவீத வாக்குகளையும் 2023 ஆம் ஆண்டு 6.35 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த முறை 9.24 சதவீதம் கூடுதலாக பெற்றிருந்தாலும் டெபாசிட்டை இழந்துவிட்டது நாதக. டெபாசிட்டை திரும்ப பெற வேண்டுமானால் ஒரு கட்சி 16 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அது போல் இந்த தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் என பார்த்தால் திமுகவும், நாதகவும்தான்.
இவர்களில் திமுகவுக்கு முதலிடம் என்றால் நாதகவுக்கு இரண்டாவது இடம் என சொல்ல முடியாது. ஏனென்றால் 20 சதவீத வாக்குகளை பெற்றால் மட்டுமே இரண்டாவது இடம் என அதிகாரப்பூர்வமாக சொல்லலாம். எனவே இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாதது நாதகவுக்கு பலமாக கருதப்பட்டிருந்தாலும் பெர்ஃபார்மன்ஸ் என பார்த்தால் அதில் டெபாசிட்டும் போச்சு, 2ஆவது இடமும் காலி என்றே சொல்லலாம்.
நாதகவுக்கு இந்த முறை 24 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளதுதான். ஆனால் அதில் அவர்களுக்கான வாக்குகள் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரைதான். மற்ற வாக்குகள் எல்லாம் அதிமுக, பாஜக, தேமுதிக, திமுக எதிர்பார்ப்பாளர்களின் வாக்குகளாகத்தான் இருக்க முடியும் என சொல்லப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications