திரும்ப திரும்ப "அதையே" சொன்ன பொன்முடி.. விசாரணையில் "வார்த்தையை" விட்டு.. அப்ப "அவரும்" சிக்குகிறாரா
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை மேற்கொண்ட ரெய்டு நடவடிக்கையில், அமைச்சர் பொன்முடி அடுத்த நபராக சிக்கியுள்ளார்.. நேற்றைய தினம் விசாரணை நடந்துள்ள நிலையில், இதுகுறித்து சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
செந்தில் பாலாஜி பரபரப்பே இன்னும் முடியாத நிலையில், அடுத்த அதிரடியாக அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையினர் வளையத்துக்குள் வந்துள்ளது திமுகவில் அதிர்ச்சியை தந்து வருகிறது.

பொன்முடியின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனம், தொழில் நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையை மேற்கொண்டனர்.
பொன்முடி: பொன்முடிக்கும், அவரது மகன் கவுதம சிகாமணிக்கும் சொந்தமான வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் அங்கிருந்து கைப்பற்றியிருக்கிறார்கள்.. இதனடிப்படையில், சம்மனும் வழங்கப்பட்டு, பொன்முடியை தங்கள் அலுவலகத்திற்கு நேற்றே அழைத்துச்சென்று, அதிகாரிகள் விசாரணையும் நடத்தினார்கள்..
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம், அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. பிறகு, விசாரணை முடிந்து பொன்முடி வீட்டுக்கு திரும்பினார்.. எனினும், இன்று மாலை 4 மணிக்கு மறுபடியும் அவரை ஆஜராகும்படி, நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
மனிதாபிமானம்: இதுகுறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் சொன்னபோது, விசாரணை நடத்துவதாக அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது... அவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. அமலாக்கத்துறையினரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பொறுமையாக பதிலளித்தார். கவர்னரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால், அமைச்சர் மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரித்தது மனித உரிமை மீறல். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும்படி அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
விசாரணை: இந்நிலையில், இதுகுறித்த மேலும் சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. 17 மணி நேர சோதனைக்குப்பிறகு அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் அமலாக்கத் துறையினர்... விடிய விடிய அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. அந்த விசாரணை, பொன்முடியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது போலவே இருந்ததாம்... எனினும் விசாரணை முழுவதும் முடியவில்லை..
ஆனால், ஓவர் மன அழுத்தத்திலும் களைப்பிலும் பொன்முடி இருந்ததால், விடியற்காலை அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. விசாரணை முடியாததால்தான், மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகச் சொல்லி அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் நடந்த விசாரணையில், "எனக்கு நினைவில்லை, என் மகனுக்குத்தான் தெரியும், வழக்கறிஞரிடம்தான் கேட்க வேண்டும்" என்கிற பதிலையே பொன்முடி திரும்ப திரும்ப சொன்னாராம்.
அதேபோல, விசாரணையில், மிக மரியாதையாக நடத்தப்பட்டிருக்கிறார் பொன்முடி... சம்மன்படி, இன்று ஆஜராகும் பட்சத்தில் விசாரணை மிக அழுத்தமாக இருக்கும் என்றம் சொல்லப்படுகிறது.
கைது நடவடிக்கை: பொன்முடியை தொடர்ந்து, அவரது மகனும் விசாரிக்கப்படவிருக்கிறார்.. இதில், பொன்முடி கொடுக்கும் பதிலை வைத்தே அவரது மகனை முதலில் கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.. அந்தவகையில், முதலில் கைதாவது பொன்முடியா? அல்லது அவரது மகனா ? என்கிற பட்டிமன்றம் திமுகவில் நடந்து கொண்டிருக்கிறதாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications