Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவக்குமாருக்கு இந்த மேட்டர் தெரியுமா? சூர்யாவிடம் ஆவேசத்துடன் வந்த ராஜேஸ்வரி பிரியா.. நறுக் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் சூர்யாவுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.. அத்துடன் ஒரு முக்கிய கோரிக்கையையும் விடுத்திருக்கிறார்.

கடந்த மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தன்று ராஜேஸ்வரி பிரியா வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.. அதில், "எப்படி சினிமாவில் சிகரெட் குடிப்பதனை ஊக்குவிக்க கூடாது என தேசிய புகையிலை கட்டுபாட்டுத் திட்டம் மூலம் 2003 ல் விளம்பர தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் உள்ளதோ அதே போன்று புகை பிடிக்கும் காட்சியே இருக்க கூடாது என்றும் சட்டம் வேண்டும்.

Rajeshwari Priya Sivakumar Actor Surya

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 53% மேல் திரைப்படங்களே புகைபழக்கம் அதிகரிக்க காரணம் என்று வெளியிட்டுள்ளது. அதனால், எதிர்கால சந்ததியினரின் உயிரை காக்க அனைத்து நடிகர்களும் நடிகைகளும் திரைப்படத் துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆவேசம்: அதேபோல, சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் லியோ பட பாடல் வெளியானபோது, ராஜேஸ்வரி பிரியா கடும் ஆவேசத்துடன் சேனல்களுக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.

அதில், "நான் ரெடி' பாடலில், ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகரெட்டை வாயில் வைத்து நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு "சர்க்கார்" படத்தில் முதல் காட்சியிலேயே சிகரெட்டை வாயில் வைத்திருந்தார்.. அதற்கும் நான் எதிர்ப்பு தந்தேன்..

கொள்கைகள்: இத்தனை இளைஞர்கள் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.. ஒரு தலைவராக பார்க்கும் அளவுக்கு, அவரே தன்னை கிரியேட் செய்தும் கொள்கிறார்.. அப்படி இருக்கும்போது, அதற்கான அடிப்படை பண்பு ஏதாவது இருக்கணும்தானே? சமூகத்தின் மீதும் அக்கறை இருக்கணும் இல்லையா? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

விஜய்யை எதிர்ப்பதால், தனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காகவே ராஜேஸ்வரி பிரியா இப்படியெல்லாம் பேட்டிகளை தந்து பரபரப்பை கிளப்பிவிடுகிறார் என்று விஜய் ரசிகர்களே இதனை அப்போது விமர்சித்திருந்தனர். ஆனாலும், தன்னுடைய கருத்துக்களில் இன்றுவரை உறுதியாக இருந்து வருகிறார் ராஜேஸ்வரி பிரியா.

நடிகர் சூர்யா: இதோ விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்த அறிக்கையில், "சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.

உங்கள் தம்பி நடிகர் கார்த்தி அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து, உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா?
அறக்கட்டளை: உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? உங்கள் நடிப்பை நம்பாமல், எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா" என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா காட்டமாக விமர்சித்திருக்கிறார். இதற்கு சூர்யா ரசிகர்கள் திரண்டு வந்து ராஜேஸ்வரி பிரியாவுக்கு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+