ஒரே குழப்பம்.. பின்வாங்கிய ஆளுநர் ரவி! ஏஜியிடம் கூட கேட்கவில்லை.. "யார்" அந்த ஐடியாவை கொடுத்தது?
சென்னை: அமைச்சர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லாமலே ஆளுநர் ஆர். என் ரவி செந்தில் பாலாஜியை நேற்று நீக்குவதாக அறிவித்தார். அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கியது யார் என்ற விவாதம்தான் தற்போது எழுந்துள்ளது.
அமலாக்கத்துறை வழக்கிற்கு இடையே நேற்று இரவு திடீரென செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். செந்தில் பாலாஜி பதவியில் தொடர கூடாது. அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தால் அவர் மீதான விசாரணை சரியாக நடக்காது.
அவரின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது. அதனால் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.

ஆனாலூம் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
பின்வாங்கினார்: இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .
ஆலோசிக்கவில்லை: நேற்று நடந்த இந்த சம்பவங்கள் மூலம் ஆளுநர் ஆர். என் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அதாவது அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அவரிடம் பேசாமலே ஆளுநர் ஆர். என் ரவி முடிவெடுத்துவிட்டார் என்பது தெளிவாகிறது.
பொதுவாக இது போன்ற பெரிய விஷயங்களில் முடிவு எடுக்க ஆளுநர் ரவி தலைமை செயலாளரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை செய்ய வேண்டும். அது இரண்டையும் ஆளுநர் செய்யவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அமைச்சர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லாமலே ஆளுநர் ஆர். என் ரவி செந்தில் பாலாஜியை நேற்று நீக்குவதாக அறிவித்தார்.
இதனால் அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கியது யார் என்ற விவாதம்தான் தற்போது எழுந்துள்ளது. ஏற்கனவே பல வழக்குகளில்.. ஆளுநர்களுக்கு எதிராக உயர், உச்ச நீதிமன்றம் இதில் கண்டிப்பான கருத்தை கூறி உள்ளது. அமைச்சரவையை தன்னிச்சையாக மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லவே இல்லை என்று அறிவித்துள்ளது. முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிப்பார் என்றும், பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தைப் பற்றி பேசக்கூடாது என்றும் பிரிவு 164 கூறுகிறது. அதை ஆளுநர் மீற முடியாது. இதனால் சட்டம் தெரியாமலே அவருக்கு யாாவது இந்த ஆலோசனையை வழங்கினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்! -
கரூர் கூட்ட நெரிசல்! திட்டமிடப்பட்ட சதியா? செந்தில் பாலாஜியிடம் பல மணி நேரம் தொடர்ந்த சிபிஐ விசாரணை -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்











Click it and Unblock the Notifications