மிட்நைட்டில்.. ரஜினிக்கு போனை போட்ட புள்ளி.. ஸாரி சொல்லிட்டாராமே.. கதிகலங்கும் ரெய்டு மேட்டர்.. ஏன்?
நடிகர் ரஜினிகாந்திடம் தயாரிப்பாளர் ஒருவர் உதவி கேட்டதற்கு, அதை செய்ய மறுத்து விட்டாராம்
சென்னை: திடீர் ரெய்டுகள் காரணமாக, கோலிவுட் வட்டாரமே வெலவெலத்து போயுள்ள இந்நிலையில், முக்கிய தகவல் ஒன்று பரபரத்து வருகிறது.
பிரபல சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன்.. இவருக்கு 58 வயதாகிறது.. இவர் தமிழகத்தின் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகம் கோலோச்சுபவரும்கூட.. கடந்த 2020ம் ஆண்டு, திடீரென அன்புச்செழியன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்..
அப்போது, கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய நிலையில், இந்த விவகாரம், அப்போது, தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் அன்புச்செழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..

கோலிவுட்
இன்று 3வது நாளாக சோதனை நடந்து கொண்டிருக்கிறது.. இதுவரை நடந்த ரெய்டில், கணக்கில் காட்டப்படாத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றியதாக தகவல் வெளியாகி வருகிறது.. அதேபோல, கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். ரெய்டுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி கோலிவுட்டை கடுமையாக தாக்கியது. இவரை தொடர்ந்து, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் வீடுகளிலும், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது, கோலிவுட்டையே கலங்கடிக்க செய்துள்ளது.

ரஜினி
இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கிய தகவல் பரபரத்து வருகிறது.. அன்புச்செழியன், எஸ்.தாணு உள்ளிட்ட கோலிவுட் சினிமா தயாரிப்பாளர்களை குறி வைத்து ரெய்டுகள் நடத்திவரும் நிலையில், ஒரு தயாரிப்பாளர் ரொம்பவே மிரண்டு போயுள்ளாராம்.. இந்த ரெய்டின் விளைவு, தன்னை பாதித்துவிடாமல் இருப்பதற்காக நடிகர் ரஜினியிடம் உதவி கேட்டுள்ளார் அவர்.. 2-ந்தேதி இரவு, ரஜினிக்கு போனை போட்டும் பேசி, தனக்கு உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார். அதற்கு எடுத்த எடுப்பிலேயே ரஜினி மறுத்து விட்டாராம்.

போயஸ் கார்டன்
"அப்படியானால், மத்திய அரசிடம் நேரடியாக பேசி, எனக்கு உதவி செய்யமுடியாவிட்டாலும், முக்கிய நபரின் தொடர்பை மட்டுமாவது, ஏற்படுத்திக் கொடுங்கள், நான் பேசிக்கிறேன்" என்று கேட்டிருக்கிறார்.. அதற்கும் ரஜினி, ஸாரி சொல்லிவிட்டாராம்.. மேலும், இது போன்ற விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை என்றும் சொல்லி உதவி செய்ய மறுத்துவிட்டாராம்... இரவு நேரம் என்றும் பாராமல் போனை போட்டு உதவி கேட்டவர், ரஜினிக்கு நீண்ட கால பழக்கம் என்கிறார்கள்.. ஆனாலும், ரஜினி இதில் தலையிடுவதை தவிர்த்ததாக சொல்கிறார்கள்.
Recommended Video

நெருடல்
வருமான வரி விஷயத்தில் ரஜினிகாந்த் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது என்றாலும், சமீபத்தில்தான், தமிழகத்தில் அதிக வரி செலுத்தினார் என்று கூறி, ரஜினிக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. அதேபோல, தனக்கு நெருடலாக உள்ள விவகாரங்களில், முக்கியமாக, முறைகேடான செயல்பாடுகளுக்கு ரஜினி என்றுமே துணை போவதில்லை என்பார்கள்.. அந்தவகையில்தான், தயாரிப்பாளரின் கேட்ட உதவியைகூட நாசூக்காக மறுத்துள்ளதாக தெரிகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications