விஜயகாந்துக்கு திடீர் சுவாச பிரச்சினை? ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சையா?
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக தலைவரும் முன்னாள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு திடீரென சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கடந்த மாதம் இறுதியில் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணியும் , நடிகர் நாசரும் மியாட் மருத்துவமனையில் தலைமை மருத்துவரை சந்தித்து கேட்டறிந்தனர். அதில் விஜயகாந்த் தாமாகவே சுவாசிக்கிறார். அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்ததாக கூறப்படும் தகவல்கள் எல்லாமே பொய்யானது. அப்படி எதுவும் செய்யவில்லை.
அவருக்கு வெறும் சளி பிரச்சினைக்குத்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கூடிய விரைவில் வீடு திரும்புவார் என தலைமை மருத்துவர் தெரிவித்ததாக ஆர்.கே. செல்வமணி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் கேப்டன் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள். வதந்தியை யாரும் நம்பாதீர்கள், அவர் விரைவில் வீடு திரும்பி நம்மை சந்திப்பார் என பிரேமலதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்றும் மீண்டும் ஒரு விளக்கத்தை பிரேமலதா வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தெரிவித்ததுடன் அவருக்கு தீவிர சிகிச்சை எல்லாம் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதை பார்த்தவுடன் தொண்டர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி செய்யப்படவில்லை என்பது அவருடைய கழுத்தை பார்த்தாலே நன்றாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை பெருவெள்ளம் குறித்து பிரேமலதா பேசுகையில், கேப்டன் மீது ஏன் வன்மத்தை கக்குகிறீர்கள் என கேட்டு கண்ணீர் விட்டார். அவர் நன்றாக இருக்கும் போது அவர் மீது ஏன் வதந்திகளை பரப்பி பரபரப்பை கிளப்புகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு நுரையீரல் துறை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு முழுவதுமாக ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications