டிஐஜி விஜயகுமார் தற்கொலை எனக்கு அதிர்ச்சி.. பணிச்சுமை.. 6 மாதமா லீவு தரலை.. சீமான் பகீர்
சென்னை: டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். ஆறு மாத காலமாக விடுமுறை கேட்டும் அவருக்கு கொடுக்கவில்லை என்றும் சீமான் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. காவல்துறை உயரதிகாரியின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பணிச்சுமையோ, வேறு எந்த பிரச்சினையோ இல்லை என்றும் மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை உயரதிகாரி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

விஜயகுமார் தற்கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜயகுமாரும் நானும் ரொம்ப நெருக்கம் உறவுக்காரர். எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு நிறைய அழுத்தம் இருந்தது. பணிச்சுமையும் இருந்தது. மிகச்சிறந்த அறிவாளி. எல்லோர் மீது அன்பாக இருப்பார். துணிச்சல்காரர். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் ஏன் இப்படி செய்தார் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
மன தடுமாற்றம் உள்ளவர்கள், கோழை அப்படி யாராவது இருந்தால் கூட பரவாயில்லை. துணிச்சலான காவல்துறை அதிகாரி இப்படி செய்து கொண்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துளி கூட நாங்கள் சிந்தித்து பார்க்கவில்லை. டிஐஜி நிலையில் இருக்கும் அதிகாரிக்கே இத்தனை அழுத்தம் இருக்கிறது என்றால் சாதாரண காவலர்களுக்கு எப்படி மன அழுத்தம் இருந்திருக்கும். பணிச்சுமை அதிகம் உள்ளது.

சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு விடுமுறை விட வேண்டும். விடுமுறை விட்டாலும் ஊதியத்தை பிடித்தம் செய்வதால் பலரும் அதனை விரும்பவில்லை. 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு சுற்றுலா செல்ல அனுமதிக்க வேண்டும். விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வளவோ செலவு வருகிறது. சமாதி கட்டுவதற்கு பல கோடி செலவு செய்கிறார்கள் காவலர்கள் குடும்பத்திற்காக செலவு செய்யலாமே என்றும் சீமான் தெரிவித்தார்.
ஐபிஎஸ் படிக்கும் போதே காவல்துறையில் பணி செய்த விஐயகுமாருக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்துள்ளன. அதைப்பற்றி தனது முகநூல் பக்கத்தில் விஜயகுமார் பதிவிட்டுள்ளார். தேர்வுக்காக விடுமுறை கேட்டால் டிரான்ஸ்பர்தான் பரிசாக கிடைக்கும் என்றும் அப்போதே தனக்கு மன உளைச்சல் இருந்தது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் விஐயகுமார் ஐபிஎஸ்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications