"மைதா, ரவை எதுவும் இல்லாமல்... வாயிலேயே வடை சுடுபவர் பிரதமர் மோடி!" திண்டுக்கல் லியோனி சாடல்
சென்னை: திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைத் திண்டுக்கல் லியோனி சாடி பேசினார்.
Recommended Video
சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த பாசறை கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திமுக பாசறை
சென்னை வட கிழக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சனம், திண்டுக்கல் லியோனி திருவொற்றியூர், மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் பல மாமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சாதனைகள்
மேலும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்குச் சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை விளக்கிப் பேசினார்.

பெண்கள் நலத்திட்டம்
தற்போதைய தமிழக முதல்வர் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறார் என்று குறிப்பிட்ட திண்டுக்கல் லியோனி, திராவிட ஆட்சியைப் பொருத்தவரை தமிழக முதல்வர் பெண்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செய்துள்ளார் என்றும் அரசுப் பள்ளியில் படித்த மாணவி கல்லூரிக்குச் செல்லும் பொழுது மாதம் 1000 ரூபாய் திட்டம் என்பது வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

வடை
மேலும், பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற திட்டங்களைச் செய்து வருபவர் தமிழக முதலமைச்சர் என்று பெருமிதமாக கூறினார். தொடர்ந்து மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் சாடிய அவர், பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில் வெறும் வாயிலேயே வடை சுடுவதாகக் கூறினார். மைதா, ரவை என எதுவுமே இல்லாமல் வெறும் வாயிலேயே வடை சுடுவதாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications