மீண்டும் கல்லூரிக்கு போகலாம்.. அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு.. எப்போது இருந்து தெரியுமா?
சென்னை : ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு பிறகு பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மாதம் 7ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற்று வந்தன.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக பிப்ரவரி 1 முதல் 20 தேதி வரை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆன்லைன் தேர்வு
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது போல ஆன்லைன் மூலமே கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் இருந்த பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு குறைவு
பாதிப்பு குறைந்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் முதல் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளது. கருணா பாதுகாப்பு நடவடிக்களை பின்பற்றி பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்வுகள் நிறைவடைய உள்ளன.

நேரடி வகுப்புகள்
இதையடுத்து தேர்வுகளுக்கு பிறகு பொறியியல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் மாதம் 7 ஆம் தேதியிலிருந்து மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நிறைவடைந்து அதற்குப் பிறகு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

செமாஸ்டர் எழுத்து தேர்வுகள்
அதன்படி மார்ச் 7ஆம் தேதி இரண்டு மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச்சு மாதம் 7ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 11ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஜூன் 22ஆம் தேதி முதல் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications