'பகுத்தறிவாளர்' மாரிமுத்து 'புது கட்டிடம் பலி கேட்கும்' 'நம்பிக்கையின்' சாட்சியமாகிப் போனாரே!
சென்னை: தம்மை ஒரு பகுத்தறிவாளர் என திரைத்துறையில் இருந்து கொண்டு பிரகடனப்படுத்திக் கொண்டவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் புது வீடு ஒன்றில் கால் பதிக்க வைக்க முடியாமல் காலம் அவரை அழைத்துக் கொண்டது பெருந்துயரம்.
திரைத்துறையில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளர், உதவி இயக்குநர், இயக்குநர் என படிநிலைகளைக் கடந்து கடைசியாக துணை நடிகர் என்ற நிலைக்கு அப்பால் குணச்சித்திர நடிகராக ஜொலித்தவர். பரியேறும் பெருமாளில் ஜாதி பெருமிதக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இறுதி காட்சியில் முரணான நிலை எடுப்பவராகவும் தம்மை வெளிப்படுத்தி இருப்பார்.

டிவி விவாதங்களில் பகிரங்கமாக உன் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை, உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை, உன் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என சொற்களை அரிவாள் போல வீசியவர். இதனால் விவாத அரங்கங்கள் அதிர்ந்து போய் உறைந்து நின்றன.
திரைத்துறையில் இருந்து கொண்டு இப்படி வெளிப்படையாக, கம்பீரமாக பகுத்தறிவு சித்தாந்தத்தை முழங்கியவர். நெற்றியில் குங்குமம் இருக்கும்.. குலதெய்வம் எனும் தாத்தா வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர்.. ஆனால் பெருந்தெய்வ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இது தொடர்பாக அண்மையில் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூட இதனை சுட்டிக்காட்டி இருந்தார். எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லை என அந்தப் பேட்டியில் மாரிமுத்து கூறியிருந்தார்.
ஆனால் காலத்தின் கோலம் வேறு ஒன்றாக அமைந்து போனதை எப்படிச் சொல்வது? பொதுவாக புதிய கட்டிடங்கள், புதிய வீடு வாங்கும் போது வீட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கும்; பலி கேட்கும்; ரத்த காவு கேட்கும் என்பதெல்லாம் பொதவான ஒரு நம்பிக்கை. இதனை மூட நம்பிக்கை என ஒதுக்கி வைப்பவரும் உண்டு. இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்வோரும் உண்டு. ஆனால் இன்னொரு புது வீட்டில் கால் பதிக காத்திருந்தவராம் நடிகர் மாரிமுத்து.. அதற்குள் இப்படியாகி விட்டதே என திரை உலக சாக்கள் டிவியில் பேட்டி கொடுக்கும் போது
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்
பகுத்தறிவை நம்பியவர்
தாத்தன் எனும் குலதெய்வத்தை வணங்கியவர்
காலத்தின் கோலம்
புது கட்டிடம் பலி கேட்கும் நம்பிக்கைக்கு
சாட்சியமாகிப் போகிறார்
என்றுதான் எழுத முடிகிறது!












Click it and Unblock the Notifications